Search Here For More Information

Puthiya Thalaimurai E-Books Issue 33 to 38




Puthiya Thalaimurai E-Books Issue 27 to 32




Puthiya Thalaimurai E-Books issue 21 to 26




Puthiya Thalaimurai E-Books issue 15 to 20


Puthiya thalaimurai review

படிக்கவேண்டும் என்று புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடிக்கிக்கொண்டே போகிறேன். பத்து புத்தகம் அல்லது பத்திரிக்கை வாங்கி, ஒன்றை எடுத்துப் படித்து முடிப்பதற்குள் அடுத்த பத்து வந்து சேர்ந்துவிடுகின்றன. என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு காலத்தில் ஹேரி லோரைன் வேகமாகப் படிக்கும் முறையை (Harry Loraine Speed Learning Technique) ஓரளவு பயின்று அதைப் பின்பற்றியும் இந்த நிலை.

புதிய தலைமுறை, வார இதழ், அக்டோபர் 15, 2009:
-------------------------------------------------------------

புதிய தலைமுறை வார இதழ் மெருகேறிக்கொண்டே போகிறது. தமிழில் இப்படி ஒரு இதழ் இருப்பது பேரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் - நான்கு இதழ்கள் சேர்ந்துவிட்டது!

இந்த இதழில் என்னைத் தொட்ட சில மட்டும்:

1. தேவை: சிகரெட் உற்பத்திக்குத் தடை

பொது இடங்களில் புகைக்க தடைச் சட்டம் வந்து ஓராண்டைத் தாண்டியும் எதிர்பார்த்த பலன் இல்லை. நிறையப் பேர் பொது இடங்களில் புகைக்கின்றனர். அவர்களை யாரும் எதுவும் செய்வதில்லை. இதைப் பற்றிய மாலன் அவர்களது கட்டுரை.

2. பத்தாயிரம் மைல் பயணம்

வெ.இறையன்பு அவர்களின் இனிய கட்டுரை. பல பயனுள்ள, சுவையான தகவல்கள் அடங்கியது. முதல் வரியே அருமை: "சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. "ஒருவன் மரணமடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்". பத்தாயிரம் மைல் நடக்கிறேனோ என்னவோ, பத்தாயிரம் புத்தகங்கள் நிச்சயம் படித்திடுவேன்.

"பயனங்கலால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் சரித்திரங்கள் என்ற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப்போல ௨௪௩0 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளைப் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையும் அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாய்த் திகழ்கிறது."

"பயன்களால் தேசங்கள் இணையும். தடுப்புச் சுவர்கள் உடையும். அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப்படும். விஞ்ஞானம் செழிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்..."

இப்படி பல சுவாரஸ்யமான, சுவையான செய்திகள்.

3. அன்று பத்தாம் வகுப்பு தவறியவர் இன்று பிஎச்.டி.

கல்வி தடைப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்று தன்னம்பிக்கை ஊட்டும் முனைவர் பரசுராம் அவர்களைப்பற்றிய யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை.

4. தெய்வம் தந்த பூ!

இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் நானும், தம்பி நெல்லையும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை எல்லாம் சென்று வந்தோம். மறக்க முடியாத அனுபவங்கள். ஏற்கனவே இந்த வலைப்போவில் தனியே பதிவு செய்துள்ளேன் படங்களுடன்.

5. உருப்பட ஒரு புத்தகம்: "உன்னதம் உங்கள் இலக்கா?"

"நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சி கொண்டிருப்பவரா? "

உன்னத நிலையை அடைவதற்கான வழிகளைக் கூறும் பா.ராகவன் அவர்கள் எழுதிய "எக்ஸலன்ட்" என்ற சுய முன்னேற்ற நூலைப் பற்றிய கட்டுரை.

இன்னும் பல கட்டுரைகள், பயனுள்ள செய்திகள், தகவல்கள். குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படித்து, தொக்குத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

New tamil weekly - puthiya thalaimurai

This post is intended for readers and for the learners. Do you feel frustrated about the quality of Tamil magazines these days.


Do you feel like

None of them carry good information.
None of them induce your thought process
All of them give importance to glamour world

Few of my friends suggested me the new magazine “Puthiya Thalaimurai” weekly magazine. It’s really good , more informative. You can give it a try, it cost you Rs %

புதிய தலைமுறை - ஒரு வாசகப் பார்வை !

அச்சு ஊடக இதழ்களை இணைய ஊடகங்கள் தின்று வரும் இன்றைய காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் புதிய வார இதழ்களின் வரவுகள் குறைந்துவிட்டது. அது தவிர ஏற்கனவே இருக்கும் குமுதம், ஆவி, குங்குமம் போன்ற நன்கு அறிமுகமான இதழ்களுடன் பொட்டிக் கடைகளில் தொங்கி வாசகருக்கு முன்னாள் அறிமுகம் ஆக வேண்டுமென்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதுடன் பக்களின் உள்ளடக்கம் மற்றும் பகிர்வின், இலக்கியத்தின் தன்மை தரமெல்லாம் ஏற்கனவே இருக்கும் இதழ்களுக்கு போட்டி போடும் தன்மையில் இருந்தால் தான் ஓரளவு நின்று வளரமுடியும்.

சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது பதிவர் நண்பர் மற்றும் அன்பு தம்பி அதிஷா(வினோத்) அழைப்பின் பேரில் அவர் அலுவலகம் அருகில் சென்றேன். பதிவர் யுவகிருஷ்ணாவும் (லக்கிலுக்) அங்கிருந்தார்.

பொதுவான் பேச்சுகளுக்கு பிறகு விரைவில் மூத்த மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் திரு மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், 'புதிய தலைமுறை' வார இதழை அறிமுகப்படுத்தினார்கள். வாங்கிப் பார்த்தேன். நண்பர்களிடையேயும் கொடுத்து பரவலாக்கம் செய்யச் சொல்லி 20 பிரதிகள் கொடுத்தனர். சிவப்பு எழுத்தில் தலைப்பு 'புதிய தலைமுறை' கம்யூனிச பெயர் போல் இருக்கிறது, புத்தகம் தலைப்பை பார்த்து வாசகர் டரியல் ஆகமாட்டாங்களா ? ன்னு கேட்டேன். சிரித்தார்கள்.

சரி புத்தகம் பற்றி இப்போது, புத்தகத்தில் உள்ள அனைத்துக் பக்கங்களையும் படிக்கவில்லை, ஆனால் அனைத்துத் தலைப்புகளிலும் என்ன பொருளில் எழுதி இருக்கிறார்கள் என்பதை உள்ளிடில் ஒரிரு வரிகள் படிக்கும் ஊகிக்க முடிகிறது.

வடிவமைப்பு :அளவு புதிய ஆனந்த விகடன், மூன்று அட்டைகள் (விளம்பரம்) தவிர்த்து, பளபளப்பான தாளில் வண்ணப் படங்களுடன் வேறு விளம்பரம் இன்றி 48 பக்கங்கள், விலை பற்றிய விவரங்கள் இல்லை.

உள்ளடக்கம் :

முன் அட்டையில் இந்திய இளைஞர்கள் (இரு இளைஞிஞள், இரு இளைஞர்கள், நடுவில் ஒரு சிங் இளைஞன்) , மற்றும் உள்ளிட்டின் குறிப்பு சினிமா, நலம்,விளையாட்டு, சந்திப்பு என இருக்கிறது.

முன் அட்டையின் பின் பக்கம் யுனிவெர்செல் (மொபைல்) விளம்பரம், முதல் பக்கம்
எம்ஜிஆர் படத்தின் தொடக்கத்தில் வருவது போல் 'வெற்றி...வெற்றி' எனத் தலைபிட்ட கட்டுரை தொடக்கமாக இருக்கிறது. கடைகாரர்கள் லாபம் என்று எழுதி பட்டியல் எழுதுவது போல், எதையும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்று முதல் பக்கத்தை தொடங்கியதாக தெரிகிறது. அந்தக் கட்டுரையில் 'சாய்னா நெஹ்வால்' மற்றும் இந்திய பெண் வீராங்கணைகளைப் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு தன்முனைப்பு மற்றும் பாராட்டுக் கட்டுரை.

அடுத்து உடல்குறையுற்றோர் மற்றும் ஏழைகள் கல்வி உதவி பெறுவதற்கான தகவல் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. சிங்கையில் ஊனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை, அதற்கு பதிலாக உடல் குறையுற்றோர் என்று எழுதுவார்கள். ஊனம் என்ற சொல்லுக்கு பதிலாக இந்திய தமிழ் இதழ்கள் உடல் குறையுற்றோர் என்று எழுதினால் அவர்களுடைய தன்னம்பிக்கை மிகுதியாகும், ஊனம் என்ற சொல்வது அவர்களை தனித்துவிட்டுவிடுகிறது. அவர்களைக் குறிக்க ஒரு அடையாளப் பெயர் தேவைதான். இருந்தாலும் அதை புண்படா வண்ணம் குறிப்பிட வேண்டும். அதாவது அடையாளம் தேவை, அடைமொழி தேவையற்றது. குருடர் என்பதை பார்வையற்றோர் என்றும், செவிடர் என்பதை கேளாதோர் என்றும் எழுதிப் பழகிக் கொள்ள வேண்டும். கைகால் நன்கு செயல்படாதவர்களை மாற்றுத் திறனுடையோர் என்று குறிப்பது வழக்காகி இருக்கிறது.

அடுத்ததாக அதிஷா மற்றும் லக்கிலுக், அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியல் கல்லூரி சேர்க்கைக்கு நடைபெற்ற நேர்முகம், சேர்க்கை ஆகிய பற்றி மாணவர்களும் பெற்றோர்களும் அடைந்த துன்பங்களை நேரில் சென்று கண்டு வந்து எழுதி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று 'காலை 7 மணிக்கு நேர்முகம் தொடங்கி விடுவதால் தொலைவில் இருந்து வருபவர்கள் நேரடியாக கோயம்பேட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு குளிக்க பல்விளக்கக் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது, கல்லூரி நிர்வாகம் நேரங்களை மாற்றி அமைத்தால் பெற்றோர்கள் சிரமத்துக்கு உள்ளாக மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.

அடுத்து வாமனன் திரை விமர்சனம், சீமானுடன் மாணவர்கள் பேட்டி, கடவுள் எங்கே இருக்கிறார் ? ஆன்மிகம் தொடர்புடைய உரையாடல் கதை, சர்கரை நோய் பற்றிய மருத்துவ கட்டுரை, இளைஞர்களுக்காக 'பைக் வாங்குவது எப்படி ?' ங்கிற கட்டுரை.

சரியாக நடுப்பக்கத்துக்கு முன் உமாஷக்தியின் கவிதை.

நடுப்பக்கம் அரசியல், இருபக்கம் சேர்ந்த நடுப்பக்கத்தில் இந்திய அரசியல் மரத்தின் அரசியல் வாதிகளின் கிளைகளும், கிளைக்களுக்கு கிளைகளாக அரசியல் வாதிகளின் வாரிசு பெயர்கள், அவர்களின் சிரிய புகைப்படங்களுடன் படங்களுடன் வாழ்க ஜெனநாயகம் என்று ஒரு பெரிய வண்ண இந்திய வரைபடம்அடுத்து இதழின் பல்சுவைக்காக சேர்க்கப்பட்ட புறநகர் பயணக் கட்டுரை, ஆலம்பரா கோட்டை பற்றிய விவரங்கள் அடங்கி இருந்தது.. அடுத்து இன்றைய திரையில் வெற்றி நடைபோட்டு வரும், சமுத்திரகணி, பாண்டிராஜன் மற்றும் சசிகுமார் ஆகியோர் பற்றிய தகவல்கள், நேர்முகம் இடம் பெற்றிருந்தன.

சன் குழும திரைப்படம் ஒன்றை கிண்டலடித்த 'காசிலா மணி' என்னும் நகைச்சுவை படங்களுடன் சிரிப்பு. வைரமுத்துவின் நடந்து வந்த பாதை, தனது முதல் பேச்சு எங்கே எப்போது என்பதைப் பற்றி எழுதி இருந்தார்.

சிறுகதை இல்லாமல் வார இதழா ? அருணா ஸ்ரீனிவாசன் எழுதிய 'நிறைவு' சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. அடுத்ததாக ஒரு சமூகக் குற்றம் பற்றி, 'தவறு செய்தவர் ஆசிரியர் தண்டனை அனுபவிப்பது மாணவன்!' என்கிற புலனாய்வு செய்திக் கட்டுரை.

தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், இகலப்பை பயன்பாடு தரவிரக்கத் தகவலுடன் கணிணி தொடர்புடைய ஒரு கட்டுரை. நிறைவாக ஒரு புத்தக அறிமுகத்துடன் 46 அவது பக்கத்தில் இதழ் முடிகிறது.

******

வார இதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை திரு மாலன் மிக மிக நன்கு அனுபவமாகவே அறிந்தவர் என்பதால் 'புதிய தலைமுறை' யும் அவ்வாறே பொருளடக்கம் மற்றும் வடிவம் பெற்றிருக்கிறது. அதனால் வார இதழ்களில் மற்றொரு புதிய இதழாகப் பார்க்கிறேன். மற்றபடி வார இதழின் வடிவங்களை, கட்டுமானங்களை கட்டுடைத்து மாறுபட்ட வார இதழாக அமைக்க முயற்சித்தது போல் தெரியவில்லை, எல்லோரும் பயணிக்கும் சாலையில் பயணித்தால் சரி என்று நினைப்பதாக தெரிகிறது. கட்டுரைகளின் எழுத்தில் வழக்கமான ஊடக நீட்டல் முழக்கல், வருணனை சுற்றல், அலங்காரங்கள் போல் எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது பத்திரிக்கைத் தனம் நிறையவே இருந்தது. பத்திரிக்கையில் எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அனுபவம் தானே எழுத்து. எழுதியது தானே அனுபவம்.

குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் வரிசையில் 'புதிய தலைமுறை' மற்றொரு வார இதழாக அமைந்திருகிறது என்று சுறுக்கமாக சொல்லிவிடுகிறேன். எதாவது மாறுதல் இருக்க வேண்டும் என்கிற வம்படியாக கருத்துச் சொல்ல முடியவில்லை. மாறுதல் என்றால் என்ன மாறுதல் வாசகர் எதிர்ப்பார்ப்பு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் இவைகளால் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளதால், புதியமாறுதல்களுடம் ஒரு இதழை முன்மொழிவது, அமைப்பது கடினம் என்பதை நான் இந்த நூலின் அமைப்பையும் பொருளடக்கத்தையும் வைத்துப் புரிந்து கொண்டேன்.

பலசரக்குடன் எத்தனை மளிகைக் கடை திறந்தாலும், தரம், மளிவு மற்றும் அருகில் இருக்கும் கடை எதுவோ அதில் தான் மக்கள் வாங்குவார்கள். வாசகர் நாடிகளை அறிந்து எத்தனை இதழ்கள் வந்தாலும் அவைகள் வெற்றிபெரும். அந்த வகையில் 'புதிய தலைமுறை' வார இதழ் வாசகர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வார இதழ்.

புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமாலன், உதவி ஆசிரியராக ((எடிட்டராக) திரு யுவகிருஷ்ணா, மற்றொரு உதவி ஆசிரியராக திரு அதிஷா ஆகியோரை வாழ்த்துகிறேன். உங்கள் இதழ் பிற பிரபல வார இதழ்கள் போல் வாசகர்களை ஈர்த்து நிலைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

Puthiya thalaimurai புதிய தலைமுறை - இதழ்

சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..

முன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

புதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா? அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந்திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .
இதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.
எல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)

மறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)

நடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி ? தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.

இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..

புதிய தலைமுறை

புதிய தலைமுறை பார்த்துட்டுக் கருத்து(எதாவது இருந்தால்?) சொல்லுங்கன்னு பழைய தலைமுறை ஆளான என்னைக் கேட்டுருந்தார் நண்பர். ஆஹா.... நம்மை(யும்) மதிச்சு ஒருத்தர் கேக்கறாருன்னா விடலாமா? இல்லே விடத்தான் முடியுமா? அனுப்புங்கன்னு சொல்லி, அவர் அனுப்புனது எனக்குக் கிடைச்சது.

பதிவின் தலைப்பைப் பார்த்தீங்கல்லே.... அதுதான் வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கை/ இதழின் பெயர். இது, இப்போ என் கையில் இருப்பது, விற்பனைக்கு அல்ல-தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு இருக்கு.

அட்டை நீங்கலா நாப்பத்தியெட்டே பக்கங்கள். ஹோட்டல் தோசை மாதிரித் தேசலா இருக்கோ? வார இதழா, மாதம் இருமுறையா, இல்லே மாதம் ஒன்றா? என்ன மாதிரின்னு இன்னும் புரிபடலை. கைக்கு அடக்கமாச் சுருட்டி வச்சுக்க வசதியா இருப்பதைப் பார்த்தால் வார இதழா இருக்கும் வாய்ப்பு அதிகம்.

திறந்ததும், லேடீஸ் ஃபர்ஸ்ட்ன்னு விளையாட்டு வீராங்கனை(?)களைப் பற்றிய கட்டுரை. ஜி.கோமளா அவர்கள் எழுதியது. அதுக்குத் தலைப்பு 'வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்' ஆஹா..... செண்டிமெண்ட்டா 'டச்' பண்ணிட்டாங்க. தமிழ் சினிமாக்களில் முதல் காட்சியில் வெற்றி வெற்றின்னு கூவிக்கிட்டே வரும் நாயகனின் 'பாவம்'. Bhavam ன்னு படிங்க.

அதுக்கு அடுத்து, முக்கியமான சேதி ஒன்னு. பார்த்ததும் எனக்கு வியப்புதான். பரவாயில்லையே நம் அரசு! வசதி இல்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் 'உதவி காத்திருக்கு' கல்வி கற்பதற்கான கல்வித் தொகை. கல்விக்கான செலவே பெரும்சுமையா மாறி மனுசனை நசுக்கும் இப்போதையச் சூழலில் உதவி செய்ய சில நிறுவனங்களும், அரசும் சேர்ந்து செய்யும் இந்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது. உண்மையில் தகுதியானவர்களுக்கு இது போய்ச் சேரணும் என்பதுதான் என் ஆசை.

நமக்குப் பரிச்சயமான பெயர்களைப் பார்த்ததும் உள்ளம் கொஞ்சம் துள்ளுமே.... லேசான ஒரு துள்ளல். நம்ம அதிஷா, யுவகிருஷ்ணா எழுதிய எஞ்ஜினீயரிங் கவுன்சிலிங் பற்றிய ஒரு கட்டுரை. உண்மையைச் சொன்னால் இந்தக் கவுன்சிலிங்கைப் பத்துன ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. அதான் பழைய தலைமுறைன்னு முன்னாலேயே சொல்லிட்டேனே. அப்பப்போத் தினத்தாள்களில் கவுன்சிலிங் ஆரம்பம், ரெண்டாம் கட்டம், மூணாங்கட்டமுன்னு வரும்போதெல்லாம் அது என்னவா இருக்குமுன்னு யோசிச்சு முழிச்சுருக்கேன். இப்போ, இதைப் படிச்சதும் நல்லாவே விளங்கிருச்சு.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் எனக்கு, இங்கே ஒரு சினிமா விமரிசனமும் போட்டுருந்தது பற்றி வியப்பு ஏதும் இல்லை. ஆனால்....இந்தப் படத்தைப் பற்றி வலைப்பூக்களில் என்ன சொல்றாங்கன்னு கொசுறா ஒரு விவரம் தந்துருந்தாங்க பாருங்க. அது..... சூப்பர்.

கேள்வி நேரம் பகுதி. தொகுத்தவர் கவின் மலர். ஊடகத்துறை, மார்க்கெட்டிங் துறை மாணவர்கள் இயக்குனர் சீமானிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். சினிமா, அரசியல், மொழின்னு கலந்துகட்டி அடிச்சு ஆடியிருக்காங்க ரெண்டு தரப்பும். மொழிக்கலப்புதான் மிகப்பெரிய ஆபாசமாம். சீமான் சொல்லி இருக்கார்.

சிந்தனைகள் எங்கே இருந்தும் வரலாம். அது கடவுளைப்போல! இப்போ மின்னஞ்சலில் வந்துருக்கு ரிஷி (குமார்) மூலம். இதுக்கு ஒரு ஓவியம் வரைஞ்சுருக்கார் வாசுதேவன். அட்டகாசம் போங்க.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஜி. ஐஸ்வர்யா (எவ்வளவு பொருத்தம் பாருங்க) நம்ம இளைஞர்களுக்கிடையே பெருகிவரும் சர்க்கரை நோய், மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை.


தல சொல்லிட்டார் எப்பேர்ப்பட்ட பைக், எப்படிப் பார்த்து வாங்கணும் என்பதை. தற்கால இளைஞர்களுக்கான அடையாளங்களில் ஒன்னு பைக். ஆக்ஸசரீஸ்ன்னு வச்சுக்கலாம். விலாவரியா விஷயத்தைச் சொன்ன அந்தத் தலயின் பெயரைச் சொல்லலையே....

கவிதை ஒன்னு. நமக்கும் அதுக்கும் காத தூரம் என்பதால் எஸ்கேப்பு. ஆனா கவிதாயினி நமக்குத் தெரிஞ்சவங்கதான். உமாஷக்தி.

நட்ட நடுப்பகுதிக்கு வந்துட்டோம். அட்டகாசமா இருக்கு. நம்ம ஜனநாயகம் மக்களுக்காகத்தான் என்பதில் ஐயமே இல்லை. யாரோட கைவண்ணம்? பாராட்டுகளை அள்ளித்தர்றேன்.

பைக்கில் ஒரு பயணம். பயணக்கட்டுரை எனக்குப் பிடிக்கும். அதிலும் இது 'சரித்திர சம்பந்தமுள்ள இடம்'! ஆர்வத்துக்குக் கேக்கணுமா? எம்.பி. உதயசூரியனாம். நடையும் அருமை.

சினிமாவை விட்டுத் தொலைக்க முடியுதா? இங்கேயும் சினிமாவுக்குச் சில பக்கங்கள். ஆனால்...... நல்லவேளையா.....நடிகையின் படங்கள்,அவுங்க சொந்த சமாச்சாரங்கள் இப்படி ஒன்னும் இல்லை. தைரியமாப் படிக்கலாம். சினிமாவில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வெற்றி அடைஞ்சாங்க சில இளம் இயக்குனர்கள்ன்னு கல்யாண் குமார் எழுதி இருக்கார்.

மக்களுடைய ரசனைகள் மாறிவரும் இந்தக் காலத்தில், 'ஏதோ மக்களே நேரில் போய்க் குத்துப்பாட்டு இன்னபிற அம்சங்கள் வேணுமுன்னு தயாரிப்பாளர், இயக்குனர் வீட்டுவாசலில் தவங்கிடந்துக் கெஞ்சுறதைப்போலப் பில்ட் அப் கொடுத்துக்கிட்டுச் சினிமா என்ற அருமையான கலையைச் சீரழிக்கும் பலர் இதைக் கட்டாயம் படிக்கணும். புதிய சிந்தனையுடன் புதிய இயக்குனர்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களைப் பாராட்டத்தான் வேணும். இப்படிப்பட்டச் செய்திகள் மூலம் வாசகர்கள், திரைப்பட ரசிகர்கள் ரசனையையும் உயர்த்தலாம். எல்லாத் தொழிலையும் போல இதுவும் ஒரு சீரியஸான தொழில்.

கார்ட்டூன் ரசிகர்களுக்காக ரெண்டு பக்கச் சிரிப்புப் படம். வைரமுத்து, தன் அச்சம் தவிர்த்தது எப்படின்னு ஒரு ரெண்டு பக்கம். சுநாமியைப் பின்புலனாக வச்சு ஒரு நல்ல கதையை அருணா ஸ்ரீனிவாசன் எழுதி இருக்காங்க. கதை நாயகன் போல இன்றைய இளைஞர்கள் எல்லோரும் இருந்தால்..... புதியதோர் உலகம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன், நியாயம் நேர்மை நம்பிக்கைக்களுடனும் இளைஞர் சமுதாயம் ஒன்னு உருவாகணும் என்ற ஆதங்கம் படிக்கும் நமக்கும் வந்துருது.

தர்மம், நியாயமுன்னு சொல்லும் இந்த நேரத்தில், தேர்தல் முடிவுகளும், விடைத்தாள்கள் திருத்தமும், இதுக்குண்டானத் தேர்வுத்துறை ஆணையமும் மாணவர்கள் சமூகத்துக்கு ஏற்படுத்தும் மன உளைச்சல்களைப் படிச்சதும் கொஞ்சம் அரண்டுதான் போயிட்டேன். இப்படியெல்லாமா நடக்குது? மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த இல.கிருஷ்ணகுமாருக்கு நன்றி.

கணியன் பக்கங்களைப் பார்த்ததும் அசந்து நின்னேன். எல்லாமே ஓசிதானாம். கணினியில் தமிழ் எழுத என்ன செய்யலாமுன்னு விவரமாக் கொடுத்துருக்கார். வலைப்பதிவுகள், பதிவாளர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. இன்னும் புதுப் பதிவாளர்கள் வரணும். இன்னும் பல விஷயங்களைப் பற்றி ஆரோக்கியமான பதிவுகள் வரணும் என்று வலை உலகமே எதிர்ப்பார்ப்புகளோடு இருக்கு. இ'கலப்பையால் எளிதாக உழுது தமிழ் விதைக்க நம்ம மக்கள் முன்னுக்கு வருவாங்க. வரணுமுன்னு எல்லோரையும் போலவே நானும் நினைக்கிறேன். கடந்த அஞ்சு வருசங்களாக, இணையத்தில் தமிழில் எழுதும் பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதால் கணியன் பக்கத்தைக் கூடுதல் கவனத்தோடுப் படிச்சுப் பார்த்தேன்:-)

மொழி பெயர்ப்பு இலக்கியமுன்னு ஒன்னு அதிக அளவில் வேகமா வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கும் காலம் இது. அருமையான விஷயங்களை அவரவர்களுடையத் தாய்மொழியில் படித்துணர ஏதுவா மொழிபெயர்ப்புச் செய்யும் எழுத்தாளர்களுக்குப் புத்தக உலகில் நிறைய மதிப்பு கூடி வருவது நல்ல விஷயம்தான். அந்த வகையில் கே.ஆர்.மணியின் 'எங்கே போனது என் அல்வாத் துண்டு'க்கு ஒரு அறிமுகமும் வந்துருக்கு.

விளம்பரங்கள் இல்லாமப் பத்திரிக்கை நடத்துவது, பொருளாதார ரீதியில் ரொம்பக் கஷ்டம் என்றாலும் எல்லாத்துக்கும் அளவுன்னு ஒன்னு இருக்குல்லே? வாசகரின் வாசிப்புத் தடைபடாத வண்ணம் அட்டைகளில் மட்டுமே விளம்பரங்கள் என்னும் ஐடியா ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

பத்திரிக்கையின் அமைப்பு, லே அவுட் மற்றும் இன்னபிற டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. (தெரிஞ்சாத்தானே/) ஒரு சாதாரண வாசகியா, வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கையை ஆழ்ந்து பார்த்துப் படிச்சு, உணர்ந்ததுதான் மேலே சொன்ன எல்லாமும். ஒன்னுரெண்டு எழுத்துப்பிழைகள் கண்ணிலே பட்டன.(நான் வேணுமுன்னா ப்ரூஃப் ரீடரா வரவா?)

எஸ் ஆர் எம் கல்விக்குழுமத்துடன் இணைந்து வரப்போகும் இந்த புதிய தலைமுறைக்கு நம்ம மாலன் அவர்கள் ஆசிரியர். இன்னும் ஆசிரியர் குழுவில் யார் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சால் மகிழ்ச்சியா இருக்கும். நமக்குத் தெரிஞ்ச பெயர்கள் என்றால் மகிழ்ச்சி ரெட்டிப்பாகும் சாத்தியம் உண்டு. (ஆமாம்....மாலன் அவர்கள் ஒன்னும் எழுதலையா இதுலே? )அடுத்த மாதம் முதல் இளைஞர்களுக்கான இந்த இதழ் வெளிவரப்போகிறது.

வெற்றி பெறணுமுன்னு வாழ்த்துகின்றேன்.